Friday, 13 May 2016

பரிமள சுகந்த நாயகி சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வர ஸ்வாமி

மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் குத்தாலம் நிலையத்திலிருந்து 1-கி.மீ. தூரத்தில் உள்ளது தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குத்தாலம் பரிமள சுகந்த நாயகி சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வர ஸ்வாமி தலம்:
தலத்தின் சிரப்பு:
(1)     சுந்தர்ருக்கு பிணி நீக்கிய தலம்
(2)     சிவபெருமானுக்கு கைலையிலிருந்த உத்தாலமரம் நிழலாக வந்த சிறப்புடையது.
(3)     காசிக்கு நிகரானது.
(4)     சோழர்,விஜய நகரத்தார் கல்வெட்டுகள் உள்ளன.






இறைவர் திருப்பெயர்   : உத்தரவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார்,
                                      கற்றளி மகாதேவர்

இறைவியார் திருப்பெயர் : மிருதுமுகிழாம்பிகை, பரிமள சுகந்த நாயகி,
                                          அரும்பன்ன வனமுலையாள்

தல மரம்                         : குத்தால மரம் (ஒருவகை ஆத்தி மரம்)

தீர்த்தம்                            : காவிரி தீர்த்தம், சுந்தர தீர்த்தம், பத்மதீர்த்தம் 
                                                          வடகுளம்

வழிபட்டோர்                    : உமாதேவியார், வருணண், காளி,   அக்னி, சப்த
                                                         ரிஷிகள்(காசிபர், ஆங்கிரசர், கௌதமர்,
                                                        மார்க்கண்டேயர், வசிஷ்டர்,புலஸ்தியர்,  
                                                        அகஸ்தியர்)

தேவாரப் பாடல்கள்        :
   A. சம்பந்தர்                -       1. வரைத்தலைப் பசும்,
                                                      2. ஓங்கிமேல் உழிதரும்.

   B. அப்பர்                              -        பொருத்திய குரம்பை தன்னை.

   C. சுந்தரர்                             -     1. மின்னுமா மேகங்கள்,
                                                     2. மூப்பதும் இல்லை பிறப்பதும்

   D. ஐயடிகள் காடவர்கோன் -     வஞ்சியன நுண்ணிடையார்


பூமியில் வேறு எங்கும் காண முடியாத இந்த உத்தாலமரம் இத்தலத்தில் காணமுடிகிறது.  ஈஸ்வரன் கல்யாண திருகோலத்தில் பூமிக்கு வருகையில் இந்த உத்தாலமரம் ஈஸ்வரனுக்கு நிழ்ற்கொடையாக கைலசதிலிருந்து வந்ததாக சொல்லபடுகிறது.

இங்குஉள்ள கோபுர சிற்பங்கள் மிகவும் அழகாகவும், பெரியதாகவும், வித்யாசமாகவும் உள்ளது.





இப் புனித தலத்திற்கு 1-2-1960 இல் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆட்சியில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் செய்யப்பெற்று மிக பொலிவுடன் திகந்துள்ளது.

இந்த புண்ணியமான ஸ்தல கோபுரங்கள், குளம் மற்றும் மதில் சுவர்கள் அனைத்தின் இன்றிய நிலை பார்பவர்களுக்கும் பல கோடி சிவனடியார்களுக்கும் மிகவும் வருத்ததையும், வேதனையும் தருகிறது - பாருங்கள் படத்தை நமது பொக்கிஷம் வீன்போவதை - 56 வருடம் கடந்து விட்டது – 1960க்கு பிறகு கும்பாபிஷேகம் இன்று வரையில் இத் திருகோயிலிக்கு நடைபெறவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குறிய விஷயம்.